பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது. அங்கு 20 கிராமங்களை உள்ளடக்கிய 5,476 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இறங்கியுள்ளன.

பரந்தூர் விமான நிலைய கட்டுமான பணியை 4 கட்டமாக பிரித்து 2026-ம் ஆண்டு தொடங்கி 2028ம் ஆண்டில் முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி...சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...

இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இன்று காலை 11.30 மணிக்கு தொழில் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகளுடன் அடுத்தகட்ட பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரல! யார் அந்த சார்? முதல்வரை வாட்டி எடுத்த நயினார்..!