பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா மீது சமீபத்தில் ஏற்பட்ட சர்ச்சை தமிழ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பின் பேரில் அட்லாண்டாவிற்கு அங்கு சென்றிருந்தார். அவருடன் பாரதி பாஸ்கர் போன்ற மற்றொரு பேச்சாளரும் இணைந்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியின் போது அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் தமிழ் உணவுகளை சமைத்து உபசரிக்கும் பொறுப்பை ஏற்றிருந்தனர். அவர்கள் மிகுந்த அக்கறையுடன், விருந்தோம்பலுடன் உணவு தயாரித்து பரிமாறியிருக்கிறார்கள். அந்தப் பெண்களில் ஒருவரின் சகோதரர் சமூக வலைதளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில், ராஜா அந்தப் பெண்களை சந்தித்தபோது அவர்களின் ஊரை முதலில் விசாரித்துவிட்டு, ஊர் பெயர் காரைக்குடி என்று சொன்னதும் "நீங்க என்ன ஆளுங்க?" என்று கேட்டதாகவும், அதன் மூலம் அவர்களின் சாதியை அறிய முயன்றதாகவும் குற்றம்சாட்டினார். இந்தப் பதிவு வைரலாகி, பலரிடையே கோபத்தையும் விமர்சனத்தையும் தூண்டியது. சிலர் ராஜாவின் செயலை சாதி பாகுபாடாகக் கருதி கடுமையாகக் கண்டித்தனர்.
இதையும் படிங்க: வங்கதேசத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தம்..!! 19% வரி குறைப்பு.. அமெரிக்கா அதிரடி..!!
அந்த சம்பவத்திற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா விளக்கம் அளித்தார். சாதி குறித்து கேட்கும் அளவுக்கு சின்ன புத்தி கொண்டவன் அல்ல என்று தெரிவித்துள்ளார். எந்த ஊர் என்று அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு காரைக்குடி என்று சொன்னதாகவும் அப்போது செட்டிநாடா என்று தான் கேட்டதாக ஞாபகம் இருப்பதாகவும் தெரிவித்தார். செட்டிநாட்டு சமையலை அடிப்படையாகக் கொண்டு செட்டிநாடு என்று கேட்டதாகவும் தமிழ்ச் சாதி என்பதை மட்டுமே பெருமையாக தான் கருதுபவன் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: 'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!