நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கு ஊட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த வழக்கில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டு, ஆவணங்களும் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளனர். வழக்கு தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தியுள்ளது.
இதையும் படிங்க: அணில் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது - விஜயை மீண்டும் சீண்டிய சீமான்...!
கடந்த ஜூலை 18-ம் தேதி, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கொடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது, குற்றவாளிகள் சார்பில் 2023-இல் தாக்கல் செய்யப்பட்ட, குற்றம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது சிபிசிஐடி தரப்பு, பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதன்படி, நீதிபதி அப்துல் காதர் தலைமையில் விசாரணை நடைபெற்று, அரசு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். வாளையார் மனோஜ் மட்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த வாளையார் மனோஜ் ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கு விசாரணையின்போது, பங்களாவை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 10ஆவது குற்றவாளியான ஜித்தன் ஜாய் சார்பில் அவரது வழக்கறிஞர் மீண்டும் முன்வைத்தார்.
இருப்பினும், இதற்கு முன்னர் 2023இல் இதே கோரிக்கையை உள்ளடக்கிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போதைய மனுவும் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. இந்த மனுவை தள்ளுபடி செய்தும், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.

வழக்கில் மர்ம மரணங்கள், ஆதார அழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் தலையீடு குறித்த விவாதங்கள் தொடர்கின்றன. சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கூடாது என கேள்வி எழுப்பியது, ஆனால் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய முழு விசாரணை தேவை என முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வழக்கு தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக உள்ளது.
இதையும் படிங்க: செல்போனில் மனைவியுடன் வாக்குவாதம்... பெற்ற குழந்தையை துடிதுடிக்க அடித்துக் கொன்ற கொடூர தந்தை...!