2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) தற்போதே அதிரடியாகத் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்காக 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு, தமிழகத்தின் வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்களை வகுக்க உள்ளது.

பா.ம.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் விபரங்கள்:
குழுத் தலைவர்: மருத்துவர் இரா. செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்).
குழு உறுப்பினர்கள்:
முனைவர் அரங்க வேலு, இ.ஆ.ப (ஓய்வு) - முன்னாள் மத்திய இணையமைச்சர்.
முனைவர் கோ. தன்ராஜ் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
வழக்கறிஞர் கே. பாலு - பா.ம.க. செய்தித் தொடர்பாளர்.
திரு. கோ. ஆலயமணி - தலைவர், தமிழ்நாடு உழவர் பேரியக்கம்.
திரு. இர. அருள் - செயலாளர், பசுமைத் தாயகம்.
திரு. கே. பொன்மலை - சமூக முன்னேற்ற சங்கம்.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அல்லது பல்வேறு வழிகளில் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் தொழில் துறை சார்ந்த வல்லுநர்களைச் சந்திப்பார்கள். மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் ஒரு முழுமையான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பார்கள்.
இதையும் படிங்க: 70 ஆண்டு கடனை 5 ஆண்டில் வாங்கிய திமுக! அன்புமணி இராமதாஸ் சரமாரி குற்றச்சாட்டு!
இந்தக் குழு சமர்ப்பிக்கும் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இறுதி செய்து, பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் எனத் தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க., தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்பிலும் வேகம் காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!