சென்னை: சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த போலீஸ் தர்மராஜின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பில் போலீஸ் தர்மராஜ் பங்கேற்றிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற இந்த சம்பவம் போலீஸ் துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

தர்மராஜின் உயிரிழப்பு குறித்து தகவல் அறிந்த முதல்வர் விஜய், அவரது குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த போலீஸ் தர்மராஜின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், போலீஸ் தர்மராஜ் உயிரிழந்த துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார். அவரது உயிரிழப்பு தமிழக காவல்துறைக்கும், குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பணியில் இருந்தபோது போலீஸ் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.30 லட்சம் நிவாரணம் தற்போது முக்கிய செய்தியாகியுள்ளது.
இதையும் படிங்க: திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!