திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி தாலுக்காவிற்கு உட்பட்ட கனகாமா சத்திரம் பகுதியை சேர்ந்த தனம், மதுமிதா மற்றும் செவ்வந்தி ஆகிய மூன்று பெண்கள் தன்னை இளைஞர் ஒருவர் குறுஞ்செய்தி மூலம் தகார வார்த்தையால் பேசி துன்புறுத்தியதை திரு கனகமா சட்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, மூன்று பெண்களையும், குறிப்பாக கர்ப்பிணி செவ்வந்தி என்ற பெண்ணை தகாத வார்த்தையால் பேசி அங்கிருந்த தலைமை காவலர் ராமன் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த வீடியோவானது திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்த நிலையில், தற்பொழுது கர்ப்பிணியைத் தாக்கிய தலைமை காவலர் ராமனை பணியிடை நீக்கம் செய்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் கொரோனா! கர்ப்பிணிகள் மாஸ்க் போட்டுக்கோங்க... பொது சுகாதாரத்துறை அறிவுரை!
இளைஞரால் நொந்தரவு:
திருத்தணி அருகே காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தனம், மதுமிதா, செவ்வந்தி ஆகியோர் வீட்டிற்கு அருகே சிவாஜி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். சிவாஜி மதுமிதா என்ற பெண்ணிற்கு தகாத வார்த்தை மெசேஜ் அனுப்பி கிண்டல் கேலி செய்து வந்துள்ளார். இது குறித்து கனகம்மா சத்திரம் காவல் நிலையத்தில் மதுமிதா புகார் அளித்துள்ளார். ஆனால் அவர் கொடுத்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிவாஜி மனைவியிடம் நடந்தவற்றை மதுமிதா தனது தோழிகளான தனம், செவ்வந்தி உடன் சென்று சொல்லி உள்ளார். அப்போது
அங்கு வந்த சிவாஜி தனது மனைவியிடம் தன்னை பற்றி தவறாக பேசுகிறீர்களா எனக்கூறி மூன்று பெண்களையும் சிவாஜி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவாஜி தாக்குதலுக்கு ஆளான கர்ப்பிணி செவ்வந்தி காயமடைந்துள்ளார் .
காவல்நிலையத்தில் நடந்தது என்ன?
இதுகுறித்து நள்ளிரவு இரண்டு மணிக்கு கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் வந்த மூன்று பெண்களும் புகார் கொடுக்க சென்றுள்ளனர். அப்பொழுது சிவாஜி என்பவர் காவல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு ராமர் என்ற போலீஸ்காரர் மூலமாக அந்த மூன்று பெண்களையும் வெளியில் அனுப்புமாறு கூறியதாக கூறப்படுகிறது.

வெளியே செல்ல சொல்லியும் அவர்கள் வெளியே செல்லாததால் மூன்று பெண்களையும் ராமர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூன்று பெண்களும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்ப்பிணி செவ்வந்தி தாக்கப்பட்டு அவரும் திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறது... திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்!!