சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி மற்றும் இயக்கங்களின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அதாவது மூன்று மாதங்களுக்குள் அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவு 2025 ஜனவரி 27 அன்று நீதிபதி இளந்திரையன் தலைமையில் பிறப்பிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

எனவே, ஜூலை 2, 2025-க்கு முன், இந்த உத்தரவின் காலக்கெடு முடிவடைவதற்கு முன்பு, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். இந்த நிலையில், பொது இடங்களில் நடப்படும் கொடிக்கம்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சாலையின் நடுவில் அமைந்துள்ள தடுப்புகளில் கூட கொடிக்கம்பங்கள் நடக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூலை இரண்டாம் தேதிக்குள் கொடி கம்பங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ரொம்ப மெத்தனம்..! மனுக்களுக்கு 30 நாளில் பதில் சொல்லாவிட்டால் ரூ.25 ஆயிரம்.. ஐகோர்ட் அதிரடி!!

அப்படி கொடிக்கம்பங்களை அவற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டி வரும் என்றும் ஜனவரியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இன்னும் அமல்படுத்தவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கு! இதெல்லாம் போதாது.. கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க EDக்கு கெடு..!