தமிழக அரசு பல்வேறு துறைகள் மூலம் சமூக நலத்துறை, கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வருவாய்த்துறை போன்ற துறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, நலத்திட்டங்கள், உதவித்தொகைகள், சான்றிதழ்கள், மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், விண்ணப்பங்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுக்கப்படுவது அல்லது நிராகரிக்கப்படுவது குறித்த புகார்கள் அவ்வப்போது எழுவது உண்டு.

இந்த நிலையில், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால் பொதுநல வழக்குகள் அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். 30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்று அரசாணையை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி பேசினார். அப்போது இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: மக்கள் அரசு அலுவலகங்களில் இனி மனு அளித்தால்... அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு..!

தமிழக அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல..! எடப்பாடி ஆவேசம்..!