பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் 19 வயது கல்லூரி மாணவி அஸ்விதா. இவர் மலுமிச்சி பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை ஒரு இளைஞர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், அஸ்விதாவின் தாய் மற்றும் தந்தை இருவரும் வேலைக்கு சென்று இருந்த நிலையில், மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அலறல் சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது அஸ்விதா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் சேனல்களிடம் 1 கோடி கேட்கும் அதிமுக ஜெயராமன்... வழக்கு போட்டு அதிரடி; காரணம் இதுதானாம்!!

தகவல் அறிந்த போலீசார் கொலை செய்தவர் யார் மற்றும் கொடைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பிரவீன் குமார் என்ற வாலிபர் அஸ்விதாவை கொலை செய்துள்ளார். தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அஸ்விதாவை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் பிரவீன் குமார் சரண் அடைந்துள்ளார். பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்த பிரவீன் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒரு தலை காதலால் 19 வயது மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் மர்மம்.. ஆட்டிசம் பாதிப்பு இளைஞர் உடல் தோண்டியெடுப்பு.. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை..!