சமீபத்தில், அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

தொடர்ந்து பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், பொன்முடி மீது சைவம் மற்றும் வைணவம் குறித்து இழிவாகப் பேசியதாக எழுந்த சர்ச்சை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை.. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன மாணவர்கள்..!

சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும், மக்கள் பிரதிநிதியாக அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பொன்முடிக்கு உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது பொன்னொடி மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்றும் அவர் மீது வழக்கு பதிவு செய்யாவிட்டால் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதி எச்சரித்திருந்தார்.

மேலும் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, சர்ச்சைக்குரிய வகையில் பொன்முடி பேசியது தொடர்பாக டிஜிபி மற்றும் காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: எத்தனை FIR போட்டீங்க? Case போட அவ்வளவு கஷ்டமா.. லெப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட்..!