தமிழக அரசியல் வரலாற்றில் திரைப்பட நட்சத்திரங்களின் நுழைவு புதிதல்ல. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றோர் அதை நிரூபித்துள்ளனர். ஆனால், நடிகர் ஜோசப் விஜய் 2024-இல் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி முழு நேர அரசியலுக்கு வந்தபோது, அது தமிழகத்தின் அரசியல் நிலப்பரப்பை முற்றிலும் மாற்றியமைத்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், “சிறு பிள்ளைகள் கூட அரசியல் பேசுகின்றனர்” என்ற பேச்சு வலுவாக எழுந்தது.
இது வெறும் ஊடகப் புழக்கமோ அல்லது எதிர்க்கட்சிகளின் விமர்சனமோ அல்ல. தமிழக சமூகத்தில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தின் அடையாளம். விஜய்யின் அரசியல் நுழைவுக்கு முன்பு தமிழக அரசியல் பெரும்பாலும் இரு திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவின் இடையிலான போட்டியாகவே இருந்தது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே அரசியல் மீதான அலட்சியம் அல்லது சலிப்பு அதிகமாக இருந்த காலம் அது.

ஆனால் விஜய்யின் வருகை, குறிப்பாக அவரது இளைஞர்களை இணைக்கும் தன்மை, அரசியலை ஒரு பொழுதுபோக்கு அல்லது தொலைதூர விஷயமாக இல்லாமல், தினசரி உரையாடலின் பகுதியாக மாற்றியது. இந்த நிலையில், ஜென் Z தலைமுறை அரசியல் பழகியது என்றும் GEN Z தலைமுறை என்று முதல் அதிகாரத்தை பழகுகிறது எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! முழு விவரம்..!!
ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் தமிழக அமைச்சரவையில் ஒலிக்கப்போவது மிகப்பெரிய மாற்றம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மாற்றங்களுக்கு எல்லாம் முதலமைச்சர் ஜோசப் விஜய் தான் காரணம் எனவும் தெரிவித்தார். தமிழக அரசு நடத்தும் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் ஒலிக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் வந்தே மாதரம் அடுத்தது தேசிய கீதத்திற்கு பிறகு தான் தமிழ்த்தாய் வாழ்த்து ஒழித்தது தொடர்பான கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
இதையும் படிங்க: PM SHRI திட்டத்துக்கு அனுமதியா..? கொள்கையில் சமரசமா..? அமைச்சர் ராஜ்மோகன் பளீச் பதில்..!