தந்தைக்கு மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், எப்போது தீர்வு ஏற்படும் என பாமக தொண்டர்கள் காத்திருந்தனர். ஆனால் அதற்கு வழியே இல்லை என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் ராமதாஸிடம் பகிரங்கமாக அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளார். தன்னை நெஞ்சில் குத்தி விட்டதாகவும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது என்றும், முதுகில் குத்தி விட்டதாகவும் ராமதாஸ் மிகவும் மனம் வருந்தி பேசி இருந்தார். அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும் அவரை கட்சியிலிருந்து நீக்க மாட்டேன் என்று ராமதாஸ் கூறினார். அன்புமணி பொறுமையாக இருந்தால் நானே முடிசூட்டு விழா நடத்தி இருப்பேன் என்று கூறிய ராமதாஸ், செயல் தலைவராக அன்புமணி பொறுப்பேற்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.

ஆனாலும் அன்புமணி மீது பல்வேறு அதிருப்திகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார் ராமதாஸ். இதனிடையே இன்று தந்தையர் தினம் என்பதால் அன்புமணி தந்தையர் எல்லாம் தியாக தீபங்கள் என்று கூறினார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தந்தையர் தினத்திற்கு அன்புமணி போட்ட பதிவு அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது.
இதையும் படிங்க: சமூகநீதியின் துரோகி திமுக... யாரை ஏமாத்துறீங்க? சாட்டை சுழற்றிய அன்புமணி!

தைலாபுரத்தில் நிறுவனர் ராமதாஸ் புதிதாக தான் நியமித்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், திருவள்ளூரில் அன்புமணி அணியின் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, தனது தந்தையும் பாமக நிறுவனமான ராமதாஸிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். மருத்துவர் ஐயா என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார். ராமதாஸ் ஆணையிட்டால் மகனாக அதனை செய்து முடிக்க தயார் என்று கூறிய அன்புமணி, ராமதாஸ் ஐயாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.

ராமதாஸ் பாமகவின் மாநில தலைவர் அல்ல தேசிய தலைவர் என உருக்கமாக பேசிய அன்புமணி, மருத்துவர் ஐயா நீண்ட ஆயுளோடும் உடல் நலத்துடனும் மகிழ்ச்சியோடு நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!