திருவள்ளூரில் அன்புமணி அணியின் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ராமதாஸ் நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு பலன் கிடைக்கவில்லை என்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என ராமதாஸ் போராடியதாகவும் தெரிவித்தார்.

ஆனால் சமூக நீதி குறித்து பேசும் திமுக அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அன்புமணி, சமூகநீதியின் துரோகி திமுக என்றும் சமூக நீதி என்ற பெயரில் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். அனைத்து சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என பாமக இணைப்பதாகவும் பாமக நிர்வாகிகள் மக்களை சந்தித்து மிகப்பெரிய பிரச்சாரத்தை நடத்த வேண்டும் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: வடிவேல் ராவணனை தூக்கி எறிந்த ராமதாஸ்... பாமகவுக்கு புதிய பொதுச் செயலாளர்!

2026 இல் பாமக அங்கமாக இருக்கும் கூட்டணி ஆட்சியில் இருக்கும் என்று அறுதியிட்டு கூறிய அன்புமணி, ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் நமது கொள்கைகளை நிறைவேற்ற முடியும் மற்றும் தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தை ஆள்வதற்கு தகுதியான ஒரே கட்சி பாமக தான் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீரா பிரச்சனை.. தைலாபுரத்தில் பரபரப்பு! ராமாதாஸ் அணி மா.செ. கூட்டம்..!