சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் தலைமை மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைந்து நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அனுமதியின்றி தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைவதையும், நோயாளிகளை ஏற்றிச் செல்வதையும் முழுமையாக தடை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய மக்களை சில தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அணுகி, அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை கிடைக்காது எனக் கூறி மூளைச்சலவை செய்து தங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம், அதிக செலவு ஏற்பட்டால் மாதத் தவணை முறையில் செலுத்தலாம் என்று ஆசை காட்டி நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை திசை திருப்பிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படிங்க: சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகம் கேள்விக்குறி..! துரோகம் பண்ணிட்டீங்க... தவெகவை பந்தாடிய சீமான்..!
இந்த மோசடி நடவடிக்கைகள் செய்திகளில் இடம்பெற்ற பிறகு அரசு மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செயல்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்குள் தனியார் ஆம்புலன்ஸ்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் அல்லது அங்கிருந்து அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தனியார் வாகனங்கள் உள்ளே வருவதை தடை செய்யும் இந்த முடிவு, நோயாளிகளின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் ஓர் பொள்ளாச்சி சம்பவம்? - 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ... தவெக பிரமுகர் மீது இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு...!