சேலம் மாவட்டம்வாழப்பாடியில் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் 2 மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் சில்மிசம் கொடுத்த வழக்கில் கைதான துப்புரவு பணியாளர் ராதிகா, விடுதி காப்பாளர் விஜயலட்சுமி, விடுதி இரவு காவலர் சுமதி, சமையலர் கலைச்செல்வி ஆகிய 4 பேர் சஸ்பெண்ட் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்திரவிட்டுள்ளர்.
வாழப்பாடியில் அரசினர் சமூக நீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 சிறுமிகள் (ஆத்தூர், மல்லியகரை ) வாழப்பாடியில் உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி அருகில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்த விடுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக ராதிகா அந்த மாணவ சிறுமிகளிடம் ரகுபதி என்ற வாலிப டுடன் செல்போன் மூலம் பேசியிள்ளனர். இதற்கிடையில் அந்த இரண்டு சிறுமிகளுக்கும் குளிர்பானத்தில் மது கலந்து பணியாளர் ராதிகா கொடுத்ததாகவும், மேலும் சிறுமிகளுக்கு விடுதியின் அருகே இளைஞர் ரகுபதியுடன் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அந்த சிறுமிகள் இருவரும் அவரது பெற்றவர்களிடம் தெரிவிததுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!
இந்த தகவலின் அடிப்படையில் அவர்கள் இதுகுறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர் அந்த புகாரின் அடிப்படையில் ராதிகாவை 2 நாட்கள் முன்பு ஆத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் வைத்து வாழப்பாடி டிஎஸ்பி சபரிநாதன், மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று வாலிபரை ரகுபதியை கைது செய்தனர், இருவரையும் கைது செய்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் மாணவியர் விடுதி பணியாட்கள் நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிளஸ் 2 மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை... ஆபாச படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரன் கைது..!