தமிழக அரசியலில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு இடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சசிகலா அவர்கள் அதிமுகவின் ஒற்றுமை குறித்துத் தனது மனவேதனையையும், எதிர்காலத் திட்டங்களையும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
அதிமுகவில் நிலவும் பிளவுகள் குறித்துப் பேசிய சசிகலா, கட்சியின் வேர்களை நினைவு கூர்ந்தார். இது திமுகவை எதிர்ப்பதற்காகத் தலைவர் எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்; எங்கள் ரத்தத்திலேயே திமுக எதிர்ப்பு கலந்திருக்கும்.
அதிமுக தற்போது ஒற்றுமை இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது மனசு புண்படுகிறது; நாம் எல்லோரும் ஒன்று கூடினால் அதிமுக மீண்டும் ஒரு கடலாக மாறும். பழைய கசப்புகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது இப்போது காலத்தின் கட்டாயமாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் தாம் இருந்த நாட்களை அவர் நினைவு கூர்ந்தார்: ஆட்சியில் பிரச்சினைகள் வரும்போது நான் தவறுகளைச் சுட்டிக்காட்டுவேன்; ஜெ அம்மா அதை ஏற்றுக்கொண்டு சரி செய்வார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி அதிரடி! வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்களின் பதவிகள் பறிப்பு!
தலைவர் மறைவுக்குப் பின் அதிமுக உடைந்தபோது, மீண்டும் ஒன்றிணைந்து ஜெ அம்மா பொதுச்செயலாளர் ஆனார்; அப்போது ஆர்.எம். வீரப்பனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கச் சொல்லி நான் தான் பரிந்துரைத்தேன்.
கட்சியிலிருந்து வெளியே போனவர்கள் யாரையும் விடாமல் எல்லாரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என எஸ்.பி. வேலுமணி பேசியது நல்ல விஷயம் எனச் சசிகலா பாராட்டியுள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியதே சசிகலாதான் என வேலுமணி குறிப்பிட்டது அதிமுகவின் ஒரு தரப்பினரிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.
"அதிமுக மீண்டும் ஒரு கடலாக மாறும், அதை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள்" என்ற நம்பிக்கையுடன் சசிகலா தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை..!! சசிகலா, டிடிவி-யை இணைக்க வேண்டும்..!! எஸ்.பி.வேலுமணி விருப்பம்..!!