தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் தங்கள் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகைகளில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ஆதரித்துள்ளது. இந்த விவகாரம் பெற்றோர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் கட்டண வெளிப்படைத்தன்மை குறித்த புகார்களை அடுத்து எழுந்தது. மாநில தகவல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் இயக்குநரகம் ஜூன் 1, 2026 அன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்விக் கட்டணங்களை நர்சரி முதல் பல்வேறு பாடத் திட்ட பள்ளிகளும் அறிவிப்பு பலகைகளிலும், இணையதளங்களிலும், சேர்க்கை விண்ணப்பங்களிலும் தெளிவாகக் காட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. ஜூன் 5-க்குள் இதை நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மத்திய பாடத் திட்ட பள்ளிகளை மாநில அரசு கட்டுப்படுத்த முடியாது என சங்கம் வாதிட்டது. இருப்பினும், நீதிபதி எம். தண்டபாணி இடைக்கால தடை வழங்க மறுத்தார். கல்விக் கட்டண விவரங்களை வெளியிடுவதில் பள்ளிகள் மறுப்பு தெரிவிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, பொது நலன் கருதி வெளிப்படைத்தன்மை அவசியம் என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!
தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி நியாயத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி கட்டணம் தொடர்பாக மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனராக உத்தரவை எதிர்த்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வெற்றிக்கு ஆப்பு..? உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு..!!