திருச்செந்தூர் முருகர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக இன்று மாலை திருச்செந்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கோவில்களில் தமிழில் குடமுழுக்கு என்பது இனத்தின் அடிப்படை உரிமை என தெரிவித்தார். கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட தமிழில் மந்திரங்கள் ஓதப்படுகிறது. முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடனா? ஏன்? தமிழக அரசுக்கு சீமான் கேள்வி!!

முருகனே தமிழ் தான் முருகனை விட்டு தமிழை எப்படி பிரிப்பீர்கள் என்றும் முருகனுக்கு தமிழில் குடமுழுக்கு கிடையாது என்பது எவ்வளவு பெரிய வரலாற்று கொடுமை எனவும் கூறினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது முக்கியமல்ல, அன்னை தமிழில் அங்கு அர்ச்சனை நடக்கிறதா என்பது தான் முக்கியம் என தெரிவித்த சீமான், எங்கள் தாய் மொழியில் இல்லாத நற்ச்சொற்கள் என்ன இருக்கிறது என்றும் கும்பாபிஷேகம் என்ற வார்த்தையில் கூட தமிழ் இல்லை எனவும் சாடியுள்ளார்.

சைவத்திலிருந்து தமிழையும், தமிழிலிருந்து சைவத்தை பிரிக்க முடியாது., அந்த இறைக்கு தமிழில் மந்திரம் ஓதப்படாது என்பதை எப்படி சகித்துக் கொள்ள முடியும் என்றும் சீமான் காட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா ரூ.10 லட்சம்.. மருத்துவர்கள் நடுத்தெருவுல நிக்கணுமா.. சீமான் காட்டம்!