நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு 13 கோடி நிதி ஒதுக்கிருப்பது இதைவிட இந்த இனத்தை யாராலும் அவமதிக்க முடியாது என்பது காட்டுவதாக சீமான் வேதனை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தமிழனுக்கும் இன உணர்வு, மான உணர்வு இருக்க வேண்டும்., மானம் கெட்டு நாம் இவர்களுக்கு வாக்கு செலுத்துகிறோம்.,அதனால் தான் தமிழனை எவ்வளவு மிதித்தாலும் வாக்குச் செலுத்துவோம் என நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.

மொழிக்கு மட்டுமா நிற்கவில்லை கச்சத்தீவு மீட்பு, காவிரி பிரச்சனை என எதற்கும் துணை நிற்கவில்லை என சீமான் குற்றம்சாட்டினார். மா விவசாயிகளுக்கு Gst வரியை குறைக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது தொடர்பாக பேசிய அவர், டெக்னாலஜி வளர்ந்துவிட்ட சூழலில், கடிதம் எழுதி காலம் தாழ்த்துவதாகவும், நேரில் சென்று கூட வலியுறுத்தி இருக்கலாம்., கடிதம் என்பது கண்துடைப்பு என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொக்கைன் வாங்கியதன் பின்னணி..! நடிகர் ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்.. அவிழும் முடிச்சுகள்..!

தமிழில் குடமுழுக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான், இப்போது தான் கும்பாபிஷேகம் குடமுழுக்கு ஆகி உள்ளது.., நம்முடைய உரிமையை நம் இடத்திலேயே, போராடிப் பெறும் நிலை இருக்கிறது என்றால் எவ்வளவு அடிமையாக உள்ளோம் என்பதை நம் இனச் சொந்தங்கள் உணர வேண்டும் என்று கூறினார். போதைபொருள் வழக்கில் கைதான ஶ்ரீகாந்த் பாவம் என்று கூறிய சீமான், அவரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்றும் திரையுலகில் பிரபலமானவர்கள் கூட போதைப் பொருட்களை பயன்படுத்துவதாகவும், இவர் சிக்கிவிட்டார் எனவும் கூறினார்.

பள்ளி, கல்லூரி, வழிப்பாட்டு தலங்களிலேயே கஞ்சா, அபின், கோகைன் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், ஒழிக்க வேண்டும் என அரசு நினைத்தால் ஒழித்துவிடலாம் எனவும் தெரிவித்தார். எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் கொடுத்த சீமான், எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திவிட்டு எந்த தொகுதி காலியாக உள்ளதோ அங்கு நிற்பேன்., தேர்தல் நெருங்கட்டும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐயா நான் செஞ்சது தப்புதான்... நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய ஸ்ரீகாந்த்!