அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். பிரசாத் கொடுத்த தகவலின் பேரில், நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதுடன், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டதில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவிடம் போதைப்பொருள் தொடர்பான விசாரணையை போலீசார் தொடர்ந்தனர். தலைமறைவாகி இருந்த நடிகர் கிருஷ்ணாவை பிடித்து விசாரணை நடத்தி அவரையும், கெவின் என்பவரையும் கைது செய்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தன்னை பொறுத்தவரை நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் அப்பாவிகள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதட்டில் தேன் தடவி உணவில் விஷம்.. இது மாற்றாந்தாய் மனப்பான்மை.. சீமான் கொந்தளிப்பு!

குஜராத்தில் அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் பல கோடி மதிப்பு போதைப் பொருட்கள் பிடிபட்டபோது என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பிய சீமான், போதைப்பொருள் கலாச்சாரம் என்பது இந்தியா முழுவதும் பரவி உள்ளது என்றும் போதைப்பொருள் விற்பவர்களை விட்டுவிட்டு பயன்படுத்தியவர்களை மட்டும் கைது செய்வது என்ன மாதிரியான நடவடிக்கை என்றும் கேள்வி எழுப்பினார்.

ஸ்ரீகாந்த், ஸ்ரீ கிருஷ்ணா ஆகிய இரண்டு பேர் மட்டும் தான் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என கேட்டுள்ள அவர், போதைப்பொருள் விற்றவர் அதிமுக முன்னாள் நிர்வாகி என்பதால் தான் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். சந்தன மரம் கடத்தியதாக வீரப்பனை கொன்றீர்களே, அதை வாங்கியவர்களை என்ன செய்தீர்கள் என சீமான் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: மணல் கொள்ளையர்கள் ஆதிக்கம்; யாரும் முடிவுகட்ட தயாராக இல்லை... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!