தமிழக அரசியலில் புதிய அலை என்று அழைக்கப்படும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தீவிரமாக களமாடி வருகிறார். இளைஞர்கள் பட்டாளம் விஜயின் அரசியலுக்கு பெரும் ஆதரவு கரங்களாக இருக்கின்றனர். ஏதாவது மாற்றம் வராதா என்று எதிர்பார்ப்பவர்களுக்கு விஜய் ஒரு மாற்றமாக அமைவார் என்று கூறப்படுகிறது.
த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: சசிகலா குறித்து எதிர்பாராமல் வந்த கேள்வி.. சட்டென எழுந்து நடையைக் கட்டிய செங்கோட்டையன்... பிரஸ்மீட்டில் பரபரப்பு...!
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு மிக விரைவில் சின்னம் கிடைக்கப் போகிறது என்று தமிழக வெற்றி கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உறுதிப்பட கூறினார்.
மிக விரைவில் நமக்கு சின்னம் கிடைக்கப் போகிறது எனக்குத் தெரியும், ஆனால் அதை வெளியே சொல்ல கூடாது என்று கூறினார். அந்த சின்னத்தைப் பார்த்ததற்கு பிறகு தான், நாடே வியக்கப் போகிறது, நாடே அஞ்சப் போகிறது என்றும் விஜயை வெல்வதற்கு இனி தமிழகத்தில் எந்த இயக்கமும் இல்லை எனவும் திட்டவட்டமாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “கோவத்தில் இப்படி முடிவெடுத்திருக்கக்கூடாது” - தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வி.கே.சசிகலா அட்வைஸ்...!