சென்னை ஐஐடி வளாகத்தில மாணவியிடம் உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவியுடைய முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறை கைது செய்கிறது. ஐஐடி-யில்இன்டர்ன்ஷிப் செய்து வரக்கூடிய 20 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனியாக நடந்து செல்லும்போது ஒரு நபர் கையில் வைத்திருந்த கட்டையைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணுடைய முடியை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், அந்த பெண் பெண் சத்தமிட்டதை அடுத்து அங்கிருந்த அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த நபரிடம் இருந்து தப்பிய பெண் அங்கிருந்த காவலாளிகளிடம் தனக்கு நேர்ந்ததைக் கூறியுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதின் பெயரில் உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாருடைய விசாரணையில இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது ரோஷன் குமார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதையும் படிங்க: சிறுமி உடல் முழுவதும் பற் தடங்கள்.. காமமிருக சித்தப்பாவின் வெறியாட்டம்.. உடைந்தையான தாய்..!

அவர் அந்த வளாகத்திலே இருக்கக்கூடிய ஒரு கேண்டீனில் பணி புரிந்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து ஐஐடி வளாகத்திலும் அந்த பாதிக்கப்பட்ட மாணவியிடமும் துணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி வளாகத்தில ஒரு மாணவிக்கு இரவு நேரத்தில் இதுபோன்ற பாலியல் சீண்டல் நடந்த சம்பவம் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. வழக்கு.. இந்த தீர்ப்பு ஒரு நம்பிக்கை கொடுத்திருக்கிறது - மநீம தலைவர் கமல்ஹாசன்..!