தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றை முடித்து வேட்பாளர்களை அறிவித்தனர். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மும்முரமாக நடத்தி வந்தனர். திமுக, அதிமுக என் பல கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களை மிக தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, மக்களிடம் சென்று வாக்கு கேட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முழுமையாக ஓய்ந்தன. நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னையில் உள்ளவர்கள் சொந்த ஊர் சென்று வாக்களிப்பதற்கு வசதியாக 11,323 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி வரை எப்போதும் இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன் கூடுதலாக 6234 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாகத்தில் இருந்து கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, கோவை, கும்பகோணம், தஞ்சை, நெல்லை, சேலம் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: மயிலாப்பூர் திமுக வேட்பாளரின் ஆதரவாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம்..! தட்டி தூக்கிய தேர்தல் பறக்கும் படை..!
கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து கிழக்கு கடற்கரை, காஞ்சி, வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவரத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பணப்பட்டுவாடா செய்ய போட்டா போட்டி.! திமுக, அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்த நாதக வேட்பாளர்..!