உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா அலை ஓய்ந்தது என நினைத்திருக்கும் நேரத்தில் மீண்டும் தொற்று பரவி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா தொற்றா என்ற கலக்கத்தில் மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை மறைமலைநகரை சேர்ந்த 60 வயதான மோகன் என்பவர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் என்பவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் மோகனின் உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: BE ALERT.. மீண்டும் அச்சுறுத்த தயாராகும் கொரோனா.. கர்நாடகாவில் சித்தராமையா ஸ்மார்ட் மூவ்..

இதனிடையே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 60க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கேரளாவில் தலைதூக்கும் கொரோனா பரவல்.. சுகாதார அமைச்சர் சொல்வது என்ன..?