• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, December 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    செங்கோட்டையன் பின்னணியில் பாஜக... அதிமுகவிற்கு வார்னிங் கொடுத்த திருமா...!

    கே.ஏ.செங்கோட்டையனை  அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டது, எடப்பாடியுடனான பிரச்சனையா? அல்லது பாஜகவின் சித்து விளையாட்டா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். 
    Author By Amaravathi Sat, 29 Nov 2025 16:41:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirumavalavan about sengottaiyan joint TVK

    கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் :  குளிர்கால கூட்டத் தொடரில் வாக்காளர் SIR குறித்து எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தவும்,  அவையை ஒத்தி வைப்பதற்கு பிரச்சனைகளை எழுப்புவதற்கான சூழல் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவையை ஒத்திவைத்து அதனை விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். 

    தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர் நாடு தழுவிய அளவில் 25க்கும் மேற்பட்ட பூத் லெவல் ஆபீசர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மம்தா பானர்ஜியும் இது குறித்து கடுமையாக ஒன்றிய அரசை எச்சரிக்கும் வகையில் விமர்சித்துள்ளார். எனவே எதிர்க்கட்சிகள் இது குறித்து கடுமையான வகையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பும் என நம்புவதாக தெரிவித்தார். 

    இலங்கையில் புதிதாக அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் ஏபிபி அரசு பொறுப்பேற்ற பிறகு குடியரசுத் தலைவர் அனுரதீசநாயக்கே புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுதுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவதாகவும் இந்த சூழலில் இந்திய ஒன்றிய அரசு தலையீடு செய்து புதிய அரசியலமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி நிர்வாக முறையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது ஈழ தமிழர்கள் விரும்புவதாக தெரிவித்தார். இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க கூடிய வகையில் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய அரசுக்கு இதனை எடுத்து செல்வோம் என தெரிவித்தார். முதல்வரும் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார். 

    இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.... அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்...!

    SIR வாக்காளர் பட்டியல் சீராய்வாக இருந்தால் பிரச்சனை அல்ல என்று தெரிவித்த அவர் தற்பொழுது 2002 ஆம் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எந்த ஆவணமும் தருவதற்கு தேவையில்லை ஆனால் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூறியுள்ள 13 ஆவணங்களில் ஒரு ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என்பது குடியுரிமையை சோதிக்க கூடிய ஆவணம் என்றும் எனவே அவர்கள் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற முயற்சியில் ஈடுபடுவதாக விமர்சித்தார்.

    CAA சட்டத்தை நேரடியாக நடைமுறைப்படுத்தாமல் அதிகாரம் அற்ற ஒரு நிறுவனத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒரு போக்கு என்றும் இதன் மூலம் பத்து சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகித வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதனால் ஒரு கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படக்கூடிய அபாயம் உள்ளது என்றும் தெரிவித்தார். பீகாரில் 43 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அவர்கள் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள் தான் என தெரிவித்தார். 

    நீதிமன்றங்களில் e filing முறையை வழக்கறிஞர்கள் பலரும் எதிர்த்து வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைத்தையுமே தற்பொழுது டிஜிட்டல் முறை செய்து வருகின்ற சூழலில் அந்த நடவடிக்கை நீதிமன்றத்திலும் மேற்கொள்ளப்படுவதாகவும் அதில் உள்ள நல்லது கெட்டது குறித்து ஆய்வு செய்து சொல்ல வேண்டும் அந்த முறை அனைவராலும் எளிதாக செய்யக்கூடிய ஒன்று அல்ல எனவே அந்த முறையில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கருதுவதாக தெரிவித்தார். 

    பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக ஆளாத மாநிலங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படும் போக்கு நீடித்து வருவதாகவும் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்த அவர் தமிழ்நாடு அரசின் நிலை குலை அமைப்பது அவர்களது நோக்கமாக உள்ளது என்றும் தமிழ்நாட்டு மக்களிடையே எதிர்ப்பு உணர்வை தூண்ட வேண்டும் எனபது அவர்களது நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவித்த அவர் இதனை மெட்ரோ ரயில் திட்டத்திலும் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டை விசிக மீண்டும் கண்டிப்பாக தெரிவித்தார். 

    செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், செங்கோட்டையன் அதிமுகவில் ஒரு மூத்த தலைவர் அவர் அதிமுகவில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது அந்த கட்சிக்கு உகந்தது அல்ல என்றும், அவர் தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்தது அவருடைய முடிவு அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார். ஆனால் அதிமுகவை இப்படி ஒரு நெருக்கடிக்கு தள்ளியதில் பாஜகவிற்கு ஒரு பங்கு இருப்பதாக தெரிவித்தார். 

    செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று வந்த பிறகு என்னை அழைத்தது அமித்ஷா என்று கூறி இருக்கிறார்  . பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் அதிமுகவில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக இருக்கக்கூடிய சூழலில் இது எந்த அடிப்படையில் நிகழ்ந்தது என்ற கேள்வி எழுவதாக தெரிவித்தார்.

    பாஜகவினரால் செங்கோட்டையனுக்கும் பழனிச்சாமிக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லையா? அனைத்து பிரச்சினைகளிலும் தலையிடக்கூடிய பாஜக இந்த பிரச்சனையில் ஏன் வெளிப்படையாக தலையிடவில்லை? அவர்களை சேர்த்து வைக்க ஏன் முயற்சிக்கவில்லை? அதிமுகவை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஏன் அவர்கள் விரும்பவில்லை? அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? இது போன்ற பல்வேறு கேள்விகள் எழுவதாக தெரிவித்தார். எனவே செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேறியதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தான் காரணமா அல்லது பாஜகவின் சித்து விளையாடுகளில் இதுவும் ஒன்றா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்பதை ஏற்கனவே கூறி இருக்கிறேன் என தெரிவித்தார். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் தேர்தலை சந்திக்குமா என்ற கேள்விக்கு, எங்களுக்கு சொந்த சின்னம் பானை சின்னம் கிடைத்துவிட்டது என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அதிமுக - பாஜக கூட்டணிக்கு பின்னடைவா? - நயினார் கொடுத்த ரியாக்‌ஷன்...!

    மேலும் படிங்க
    இன்று கொஞ்சம் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!! நிம்மதி பெருமூச்சுவிடும் மக்கள்..!!

    இன்று கொஞ்சம் ஆறுதல் கொடுத்த தங்கம் விலை..!! நிம்மதி பெருமூச்சுவிடும் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    "நரி வலம் போனால் என்ன?, இடம் போனால் என்ன?" - செங்கோட்டையனை மறைமுகமாக சாடிய திமுக அமைச்சர்...!

    "நரி வலம் போனால் என்ன?, இடம் போனால் என்ன?" - செங்கோட்டையனை மறைமுகமாக சாடிய திமுக அமைச்சர்...!

    அரசியல்
    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?

    நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?

    இந்தியா
    வேலூரில் பயங்கரம்...!! மின்வேலியில் சிக்கிய மூவர் பலி... தந்தையை காப்பாற்ற சென்ற 2 மகன்களும் துடிதுடித்து இறந்த பரிதாபம்...!

    வேலூரில் பயங்கரம்...!! மின்வேலியில் சிக்கிய மூவர் பலி... தந்தையை காப்பாற்ற சென்ற 2 மகன்களும் துடிதுடித்து இறந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "நரி வலம் போனால் என்ன?, இடம் போனால் என்ன?" - செங்கோட்டையனை மறைமுகமாக சாடிய திமுக அமைச்சர்...!

    அரசியல்
    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

    கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணை கண்காணிப்புக் குழு வருகை: பொதுமக்கள் மனு அளிக்கச் சிறப்பு ஏற்பாடு!

    தமிழ்நாடு
    ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    ஒரே நாளில் 7 விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?

    நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?

    இந்தியா
    வேலூரில் பயங்கரம்...!! மின்வேலியில் சிக்கிய மூவர் பலி... தந்தையை காப்பாற்ற சென்ற 2 மகன்களும் துடிதுடித்து இறந்த பரிதாபம்...!

    வேலூரில் பயங்கரம்...!! மின்வேலியில் சிக்கிய மூவர் பலி... தந்தையை காப்பாற்ற சென்ற 2 மகன்களும் துடிதுடித்து இறந்த பரிதாபம்...!

    தமிழ்நாடு
    #BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது... அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...! 

    #BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது... அடுத்த 12 மணி நேரத்தில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்...! 

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share