அனகாபுத்தூரில் உள்ள தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், காயிதே மில்லத் நகர், ஸ்டாலின் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து 700 குடியிருப்புகள், கடைகள் கட்டப்பட்டிருந்தது. அவற்றில் கடந்த 2023-ம் ஆண்டு 20 கடைகள், 90-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியுள்ளது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். தற்போது காயிதே மில்லத் நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: திருமாவுக்கு ‘குறி’... ஷாக்கில் திமுக - தகதகக்கும் தமிழக அரசியல் களம்!

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். சொந்த வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு சார்பில் 390 சதுர அடியில் வீடுகள் வழங்கப்பட உள்ள நிலையில், 50 ஆண்டுகால வாழ்க்கையை ஐந்து நிமிடத்தில் இழந்ததாக அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
இதையும் படிங்க: எல்.முருகன், நயினார் நாகேந்திரனுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. அரசியல் அரங்கில் பரபரப்பு!!