திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பாலு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்ற வழக்கில் நேற்று முன்தினம் நீதிமன்றம், போராட்டம் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடக்க வேண்டும், 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி, எந்த கோஷங்களும் எழுப்பக்கூடாது. மந்திரங்கள் மட்டுமே உச்சரிக்க வேண்டும், எந்த ஒரு தனி நபருக்கும் அல்லது குழுவிற்கோ எதிராக ஆத்திரமூட்டம் கோஷங்கள் அனுமதி இல்லை. ஒரு மைக் மட்டுமே பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 வழிகாட்டு விதிமுறைகளுடன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி இன்று திருப்பரங்குன்றம் மயில் மண்டபத்தில் 50 பேர் கொண்ட கிராமத்தினர் மட்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கறிஞர் பாலு தலைமையில் 11 பெண்கள் உள்பட 50 பேர் கொண்ட கிராம மக்கள் தற்போது மயில் மண்டபம் அருகே உண்ணாவிரதப் பந்தல் அமைத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: “முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே...” - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நேரடி எதிர்ப்பு... திருப்பரங்குன்றம் மக்கள் எடுத்த திடீர் முடிவு...!
மேலும் உண்ணாவிரத பந்தலின் அருகே ஏராளமான கிராம மக்கள் கூடி உள்ளனர். திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சசி பிரியா தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்ரியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் மற்றும் ஹார்விப்பட்டி பகுதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு பெண்கள் தீபம் ஏற்றினர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென அவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: என்ன ராஜா கேட்டுச்சா?? - "திருப்பரங்குன்றம் இருப்பது திராவிட மண்ணில் இங்கு யாரும்...” - அமைச்சர் சேகர் பாபு பகிரங்க எச்சரிக்கை...!