திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.
11.30 மணி அளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் தந்தை மகனிடையே சண்டை நடப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரிதன்யா தற்கொலை வழக்கு... கணவர், மாமனார், மாமியாருக்கு ஜாமீன் கிடைத்ததா? நீதிமன்றம் அதிரடி!!
இதன் பேரில் சண்டை நடைபெறுவதாக கூறப்பட்ட இடத்திற்கு எஸ் ஐ சண்முகவேல் மற்றும் அவருடன் மேலும் ஒரு காவலர் சென்றதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை எஸ் ஐ சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படும் நிலையில் திடீரென அங்கிருந்த கும்பல் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த எஸ்ஐ சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தங்கபாண்டியன் என்பவரை ஐந்து தனிப் படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
ரோந்து பணிக்காக சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், எம் எல் ஏ வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் வெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான பின்னணி தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்எல்ஏ அளித்த தகவலின் பேரில் தான் எஸ் ஐ சண்முகவேல் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சண்முகவேல் கொலை சம்பவம் தொடர்பாக அதிமுக எம்எல்ஏவிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாமக்கல்லில் துயரம்! கழுத்தை நெரித்த கடன்... தவணை கட்ட முடியாமல் தவித்த தந்தை எடுத்த விபரீத முடிவு..!