தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதி வரும் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜூன் 5-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டம், தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகக் கூடும் அதிகாரப்பூர்வ அமைச்சரவை கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 10-ம் தேதி முதலமைச்சராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், அதன் பின்னர் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து அமைச்சரவையை விரிவுபடுத்தினார். தற்போது 33 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைச்சரவையில், முதலமைச்சர் தாமே முக்கியத் துறைகளான உள்துறை, காவல்துறை, பொது நிர்வாகம், இளைஞர் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் உள்ளிட்டவற்றைத் தக்க வைத்துள்ளார். இந்தச் சூழலில் நடைபெறும் கூட்டம், புதிய அரசின் செயல்பாட்டுத் திசையைத் தீர்மானிக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விரிவான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அமைச்சர்கள் பலரும் முதல் முறையாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர்களின் துறைசார் பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள், இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து முதலமைச்சர் விஜய் தெளிவான உத்தரவுகளை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: களம் சூடுபிடிக்குது..!! விரைவில் உள்ளாட்சி தேர்தல்... தொகுதி மறுவறையரை தீவிரம்..!
அரசின் திட்டங்கள் விரைவாகச் செயல்படுத்தப்பட வேண்டும், ஊழல் ஒழிப்பு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் முன்னுரிமை பெற வேண்டும் என்பன போன்ற அடிப்படை விஷயங்கள் இங்கு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும், தமிழக பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் முக்கிய விவாதம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா தடை..!! மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு..!!