அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாத அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைக்களைவு மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றி அமைக்கப்பட்ட நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி மூன்று நாட்களுக்குள் மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகையை வழங்குவதுடன் மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் குறை கலையப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரின் நேர்முக கடிதம் வாயிலாக குறைக்களைவு மனுக்களை கையாளுதல் குறித்த பல்வேறு நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்களை தவறாது பின்பற்றுமாறும், மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்குமாறு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறைக்களைவு மனுக்களை பதிவு செய்திட குறைக்களைவு மனு பதிவேடு ஒன்றினையும் அரசாணையின் பின் இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ளவாறு பராமரிக்க வேண்டும் என்றும், அப்பதிவேட்டில் அம்மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எத்தனை கொலைகள் நடந்தாலும் திமுக அரசு இன்னும் திருந்தல..! எடப்பாடி ஆவேசம்..!
அப்பதிவேட்டினை மாத இறுதியில் தலைமை அலுவலர்கள் ஆய்வு செய்து, நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து தீர்வுக்காண ஆவணம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழு வீச்சில் பரந்தூர் விமான நிலைய பணிகள்! முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை..!