காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முழு ஒப்புதலோடு வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாகப் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு அரங்கத்தை' இன்று நேரில் திறந்து வைத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், விளையாட்டு வசதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் காவிரி நதிநீர் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரைக் கொடுக்கக் கூடாது என்பதில் த்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே குரலில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள சில எதிர்க்கட்சிகளோ இப் பிரச்சனைக்கு எந்த வகையிலும் தீர்வு கிடைத்து விடக் கூடாது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு வருகின்றன. இதனால் தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதில் தாமதம் நிலவுகிறது எனக் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: தினமும் 7,000 கன அடி நீர் திறக்க வேண்டும்! உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!
தொடர்ந்து வழக்கின் நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் அனைத்து அம்சங்களையும் முதலமைச்சர் விஜய் மிக நுட்பமாக ஆலோசித்து வருகிறார். தற்போதைய சூழலில் முதலமைச்சர் கர்நாடகாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை. மாறாக, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி திங்கள்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவசர வழக்கு மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது எனக் கூறினார். அமைச்சரின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது! காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு!