தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் வி. செந்தில் பாலாஜி, எம்.பி.-க்கள் அருண் நேரு, ஜோதிமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர் என்றாலே அது கழக ஊர். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவை விடப் பெரிய எழுச்சியை இன்று இங்கே காண்கிறேன். கரூரைப் பொறுத்தவரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை, ஏனெனில் இது என் இனிய சகோதரர் செந்தில் பாலாஜியின் கோட்டை. 100 சதவீதம் வெற்றி உறுதி என்பதால் தான், அவரைப் புகுந்த வீடான கோவையில் போட்டியிட வைத்துள்ளோம். ஆனால், பிறந்த கரூரை அவர் என்றும் மறக்க மாட்டார். கரூரும் கோவையும் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நம் வசமே!" எனத் தொண்டர்களிடையே உற்சாகத்தைப் பாய்ச்சினார்.

₹5,000 கோடி நிதி: கரூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டும் சுமார் ₹5,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு வழங்கியுள்ளது. கோவில் நிலப் பிரச்சினை: கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் திருக்கோவில் நிலங்கள் தொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆராயச் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் நிரந்தரத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு! திமுக மீது பாஜக பகிரங்க குற்றச்சாட்டு அறிக்கை!
அதிமுக-வின் இலவச அறிவிப்புகளைச் சாடிய முதல்வர், அதிமுக ஆட்சியில் மக்கள் வேதனைகளையும் சோதனைகளையும் மட்டுமே சந்தித்தனர். 10 ஆண்டுகால இருண்ட ஆட்சியை அகற்றி 2021-ல் திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன் தான் இந்த ஸ்டாலின். டபுள் என்ஜின், டப்பா என்ஜின் எனப் பீற்றிக் கொள்பவர்களை வீழ்த்த, 'சூப்பர் ஸ்டார்' போன்ற எங்களது தேர்தல் அறிக்கையோடு வந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் வஞ்சிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் 22 ஆண்டுகாலக் கோரிக்கையை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியது திமுக அரசு. திராவிட மாடல் ஆட்சியில் ஜாதி, மதக் கலவரங்களோ, கும்பல் வன்முறைகளோ இல்லை. இதனைப் பார்த்து எரிச்சலடைந்த அதிமுக - பாஜக கூட்டணி பரப்பிய பொய்கள் அனைத்தும் 'புஷ்பானமாகி' விட்டது. அமித் ஷாவின் அடிமை அதிமுக-வையும், ஆணவ பாஜக-வையும் மக்கள் விரட்டியடிக்க முடிவெடுத்து விட்டார்கள். எம்பி தேர்தலில் ஒரு இடத்தில் கூடத் தமிழக மக்கள் பாஜக-வை வெற்றி பெற வைக்கவில்லை என்பதால், தமிழகத்தை வஞ்சிக்கும் ஆட்சியை அவர்கள் நடத்தி வருகிறார்கள்" எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!