கார் வாங்குவோர் பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பதை கட்டாயமாக்குவது குறித்து சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. வளர்ச்சி பெற்று வரும் இந்தியாவில் குறிப்பிட்ட துறை மட்டும் இன்றி, விவசாயம், தொழில்நுட்பம், வணிகம், ஆட்டோமொபைல்ஸ் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி சார்ந்த யுக்திகள் பயன்படுத்தபட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டுக்கும் சராசரியாக மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்த வண்ணமே உள்ளது.

பொருளாதாரம் உயர வாழ்வாதாரமும் வளர்ந்து கொண்டே வருகிறது. இப்படி பொருளாதாரத்தைப் உயர மக்கள் வாழ்வாதாரத்தையும் இரட்டிப்பாக்கி கொண்டே வருகின்றனர். பொதுமக்கள் அவர்களுக்கான சொகுசு பொருட்களுக்கு வழி வகுக்கின்றனர். வளர்ச்சி என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதாகும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் சராசரியாக இன்று கார் இல்லாத வீடு இல்லை என்றே சொல்லலாம். one time investment- ஆக பார்க்கக்கூடிய ஆட்டோமொபைல்ஸ் விற்பனை இந்தியாவில் கொடிகட்டி பறக்கிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: நாசாவின் புதிய ஸ்பியரெக்ஸ் தொலைநோக்கி.. விண்ணிலிருந்து பூமியை படம் பிடிக்கும்..!

இப்படி வீட்டிற்கு வீடு வாகனங்கள் அதிகரிப்பதனால் மாநிலத்தில் மாசு கட்டுப்படுத்துவதும் கடினமாக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும் போக்குவரத்து நெரிசலால் கடும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. ஒரு மணி நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு தற்போது மூன்று மணி நேரமாகியும் சென்றடையாத சூழல்கள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கான காரணங்களை சிந்திக்கையில் ஆட்டோமொபைல்ஸ்களின் வளர்ச்சியானது பெரும் காரணியாக பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு கணக்கின்படி 92 லட்சம் கார்கள் உள்ளன. ஆனால் இந்த கார்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகள் என்று பார்த்தால் சென்னை மாநகரில் கடினமான சூழலாக கருதப்பட்டுகிறது. சென்னை மாநகரில் பொது இடங்களில் 14 ஆயிரம் கார் மட்டுமே நிறுத்துவதற்கு இடவசதிகள் உள்ளதாகவும், மற்ற கார்கள் சாலையிலே நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையை தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது. அதில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக ஏற்படும் இந்த நிலையை மாற்றுவதற்கு, கார் வாங்குவோர் பார்க்கிங் வசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கான சான்றிதழ்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. இன்னும் ஆணையை மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இதையும் படிங்க: வங்கக்கடலில் நீடிக்கும் சுழற்சிகள்.. கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?