தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளைஞர் அருணாசலம் என்பவர் போலீஸ் காவலில் இருந்தபோது மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த மரணம் லாக் அப் டார்ச்சர் காரணமாக ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய நிலையில், போலீஸ் தரப்பில் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தமிழகத்தில் மீண்டும் கஸ்டடியல் டெத் பிரச்னையை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது. ஜூலை 17 அன்று தூத்துக்குடி சவுத் போலீஸ் ஸ்டேஷனில் இந்த சம்பவம் நடைபெற்றது. டாஸ்மாக் நிறுவனத்துடன் தொடர்புடைய வியாபாரியான அருணாசலம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி அவரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 120 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட அருணாசலம் ஸ்டேஷனில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பினர் அவரை சட்டப்படி கைது செய்ததாகவும், தனிப்பட்ட சோதனை வீடியோ பதிவுடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினருக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அருணாசலம் லாக் அப்பில் இருந்தபோது திடீரென மயக்கமடைந்ததாக போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. லாக் அப்பில் உள்ள பிற கைதிகளுடன் பேசிக்கொண்டிருந்த நிலையில் அவர் சுயநினைவின்றி விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக் அப் வெளியே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!
உடனடியாக அவருக்கு உதவி செய்யப்பட்டதாகவும், தண்ணீர் கொடுக்கப்பட்டதாகவும், அவரது தாயார் ஸ்டேஷனில் இருந்ததால் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர் சுயநினைவுக்கு வந்ததாகவும், ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதாகவும் அந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். காவல் நிலையத்தில் அருணாச்சலம் அமர்ந்திருந்த போது மயங்கி விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: அரசு மருத்துவர் தற்கொலை..? மன உளைச்சலா..? தூத்துக்குடியில் பரபரப்பு..!