2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பை சந்தித்துள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை எட்டாத நிலையில், ஆட்சியமைக்க கூடுதல் ஆதரவு தேவைப்பட்டது.
இந்தச் சூழலில் தவெக சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க., உலக முழுவதும் விஜய் ரசிகர்கள் உள்ளனர். சிலர் பெரிய தொழில் அதிபர்களாக உள்ளனர். ரசிகர்கள் பலர் கார்ப்பரேட் கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர்.

சில கார்ப்பரேட் கம்பெனிகள் மறைமுகமாக விஜய்க்கு உதவிக்கரம் அளித்து வருவதாக ரகசிய தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் எத்தனை எம்எல்ஏக்கள் வேண்டும் என்றும் அதற்காக உதவி செய்வதாக உறுதி அளித்து இருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன.
இதையும் படிங்க: “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?
இந்த அரசியல் குழப்பத்தின் காரணமாக பெண்கள் மத்தியில் திமுக மற்றும் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்தை பார்த்தல் அடுத்த தேர்தலில் அதிமுக காணமால் போகும் என்பது உறுதி என்றும் கூறி வருகின்றனர். அன்று எம்ஜிஆர் அவர்களுக்காக பெரிய தொழில் அதிபர்கள் தோல் கொடுத்து உள்ளனர். இன்று விஜய்க்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மறைமுக ஆதரவு கொடுக்க முன் வந்து இருப்பதால் திராவிட கட்சிகளின் ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க இருப்பதாக பேசப்படுகிறது. இனி விஜய் ஆட்டம் சூப்பராக இருக்கும் என்றும் வருங்காலத்தில் விஜய் தான் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார் எனவும் கூறி வருகிறார்கள்.
இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!