கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அன்னை சத்யா தெருவில் வசித்து வருபவர் அருள்மணி இவருடைய மகன் விஜய் செல்வா (33) இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நகர நிர்வாகியாக உள்ளார். இதே பகுதியில் வசித்து வருபவர் ரவி மகன் சூர்யா இவர் பாட்டாளி மக்கள் கட்சி நகர நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இதே பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இதேபோல் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் தகராறு விளக்கிவிட சென்றபோது இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசார் முன்னிலையில் தடி, கல் உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் காயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி விஜய் செல்வா, பாமக நிர்வாகி சூர்யா உள்ளிட்ட இரண்டு தரப்பை சேர்ந்த 11 பேர் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “குரான் மீது சத்தியமா பாஜகவுடன் கூட்டணி கிடையாது...” - அடித்துச் சொன்ன ஆதவ் அர்ஜுனா...!
இதையும் படிங்க: “எடப்பாடி பழனிசாமியை விஜய் ஏற்க மாட்டார்” - அதிமுகவை சீண்டி பார்க்கும் பாஜக...!