தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராமண சமூகத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் Vijay தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ வெங்கடரமணன் மற்றும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷ் ஆகியோர் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 1952ஆம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலுக்கு பிறகு, பிராமண சமூகத்தைச் சேர்ந்த C. Rajagopalachari முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் K. Kamaraj தலைமையிலான அமைச்சரவையில் ஆர். வெங்கட்ராமன் அமைச்சராக இருந்தார்.
அதன்பிறகு, 1967ல் திமுக ஆட்சி தொடங்கிய பின் பல ஆண்டுகள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கவில்லை. 1977 முதல் 1987 வரை M. G. Ramachandran தலைமையிலான அமைச்சரவையில் எச்.வி. ஹண்டே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 1991ல் J. Jayalalithaa முதல்வரானாலும், அவரது அமைச்சரவையில் பிராமண சமூக பிரதிநிதித்துவம் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!

இந்த சூழலில், 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரண்டு பிராமண அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. மயிலாப்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணன் ஏற்கனவே உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது நடந்த விரிவாக்கத்தில், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற ரமேஷ் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
31 வயதான ரமேஷ், தவெக கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2026 தேர்தலில் திமுக வேட்பாளரை பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்ற அவர், தற்போது முக்கிய துறையை கவனிக்க உள்ளார். கோயில் ஆகமங்கள் குறித்து அறிவுள்ள ஒருவர் அறநிலையத்துறையை கவனிப்பது நல்ல முன்னேற்றம் என சில தரப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
ஏற்கனவே பட்டியலினத்தைச் சேர்ந்த பலர் மற்றும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கியுள்ள தவெக அரசு, அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் முயற்சியில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: AI-க்கு தனி துறை..! தமிழகத்தில் டிஜிட்டல் புரட்சிக்கு விஜய் அரசு அதிரடி..!