கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் தொடங்கி உள்ளனர். இதனிடையில் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் உள்ள வணிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை பனையூர் விரையும் சிபிஐ அதிகாரிகள் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: கரூர் துயர குடும்பங்கள்: மாமல்லபுரத்தில் விஜய்யின் ஆறுதலுக்குப் பின் கரூர் புறப்பட்டனர்..!!
இன்று பனையூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், சிபிஐ விசாரணை நிறைவடைந்தது. சிபிஐ அதிகாரிகள் ஒரு மணி நேரமாக நிர்வாகிகளிடம் விசாரித்தனர். சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்கள் குறித்து சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தமிழக வெற்றி கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்தார். சம்மன் அளிக்க வந்த சிபிஐ அதிகாரிகள் சில விவரங்களை கேட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதையோ மூடி மறைக்கிறாங்க! எரிக்கப்பட்ட ஆவணங்கள்… சந்தேகத்தைக் கிளப்பிய நயினார்…!