திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்த ரோட்டரி சார்பில் நடைபெற்ற பாசரை நிகழ்ச்சியில் அழகிகளை அழைத்து வந்து அரை நிர்வாணமாக குத்தாட்டம் போட வைத்த விவகாரத்தில் தனியார் பார் உரிமையாளரும், தவெக உறுப்பினருமான நீதிராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரில் ரோட்டரி சார்பில் பாசரை என்ற நிகழ்ச்சி கடந்த 27,28 ஆகிய நாட்கள் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இதில் கவிஞர் வைரமுத்து, நடிகை நமிதா, பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதையும் படிங்க: "பொடியாக்க நீங்க ரெடியா?..." - அமைச்சர் சரத்குமாருக்கு சவால் விட்ட சேகர் பாபு... கையில் என்ன வச்சிருக்காரு பாத்தீங்களா?
இதில் கலந்து கொண்ட ரோட்டரி நிர்வாகிகளுக்கு அருகாமையில் இருந்த தவெக உறுப்பினர் நீதிராஜன் என்பவருக்கு சொந்தமான சொர்க்கம் பார்ட்டி அரங்கில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியின் இறுதி நேற்று முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் இரவு மது விருந்துடன் கூடிய அழகிகளின் அரை நிர்வாண நடன நிகழ்ச்சியை தவெக நிர்வாகி நீதிராஜனுக்கு சொந்தமான சொர்க்கம் பார்ட்டி ஹாலில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அந்த நிகழ்ச்சியில் சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளை அழைத்து வந்து அவர்கள் அரை நிர்வாண ஆடைகளுடன் குத்தாட்டம் போட வைத்தனர். அதனை பார்த்த ரோட்டரி நிர்வாகிகள் சிலரும் அந்த அழகிகளுடன் சேர்ந்து நடனமாடியுள்ளனர். இந்த நடனங்களை ஒருவர் பேஸ்புக் மூலம் நேரலையில் ஒலிபரப்பியுள்ளார். இது குறித்து தகவலறிந்த 15.வேலம்பாளையம் போலீசார் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு சென்று அரை நிர்வாண ஆடைகளோடு குத்தாட்டம் போட்ட அழகிகளை தடுத்து நிறுத்தினர்.
ரோட்டரி நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டும் இருக்கும் இடத்தில் அழகிகளை அரை நிர்வாண ஆடைகளுடன் நடனமாட வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பார்களை நடத்தி வருபவரும், சொர்க்கம் பார்ட்டி அரங்கு உரிமையாளரான தவெகவை சேர்ந்த நீதிராஜன் (49) என்பவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளன
இதையும் படிங்க: “மக்கள் தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்...”- விசிலுக்கு ஓட்டு போட்டவர்களை பார்த்து தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு...!