2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர்.

வியந்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூரை தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது. இதனால் விஜய் தனது பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்டார்.
இதையும் படிங்க: பரபரப்பு... ஏர்போர்ட் மூர்த்திக்கு ஒரு நாள் போலீஸ் காவல்! எழும்பூர் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சி
விஜய் பிரச்சாரத்திற்கு அதீத கூட்டம் கூடிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். கூட்டம் திரள்வதால் மட்டும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என்று கூறினார். திமுக கூட்டணியை வீழ்த்தி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவிற்கு விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். அரசு மீதான விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக உரிய நேரத்தில் பதிலளிக்கும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: எந்த துணிச்சலில் செங்கோட்டையனை சந்தித்தார்கள்? அமித்ஷாவுக்கு திருமா. கேள்வி