சென்னையின் முக்கிய இடங்களில் மெட்ரோ பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று இரவு நடைபெற்ற மெட்ரோ கட்டுமான பணியின்போது திடீரென இரண்டு பெரிய ராட்சத தூண்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூண்களுக்கு இடையே இரண்டு பேர் சிக்கினர். இதில் ஒருவர் பத்திரமாக காயங்களுடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!

ஆனால் மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அடுத்து அங்கு மீட்கும் பணி நடந்து வருகிறது. மெட்ரோ கட்டுமான விபத்தால் பூந்தமல்லி - மவுண்ட் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சரி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பெங்களூர் கூட்ட நெரிசல் பலி; நாகரீக சமூகத்திற்கு நல்ல அடையாளம் அல்ல... மனோ தங்கராஜ் பரபரப்பு கருத்து!!