மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய 2025-26 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் அகில இந்திய அளவில் டாப் 10 இடங்களுக்குள் வந்து அசத்தியுள்ளனர். குறிப்பாக, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர்கள் இந்தப் பட்டியலில் மீண்டும் இடம்பிடித்திருப்பது தமிழக கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அகில இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்து தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார் ராஜேஸ்வரி சுவே எம். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு இடையிலானப் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஏ.ஆர். ராஜா முகைதீன் அகில இந்திய அளவில் 7-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் எதிர்ப்பை தாண்டி அணை கட்டப்படும்! மேகதாது விவகாரத்தில் கர்நாடகா பிடிவாதம்!

இதற்கு முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த சரண்யா அரி டாப் 10-ல் 7-ம் இடம் பிடித்திருந்தார். அதன் பிறகு தற்போது 10 ஆண்டுகள் கழித்து இரு தமிழர்கள் டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளனர்.
முதலிடத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி (AIIMS Jodhpur மாணவர்) பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தை ஆகான்ஷ் துல் பிடித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், UPSC முதன்மைத் தேர்விற்குத் தயாராகும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 25,000 உதவித்தொகை மற்றும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிக் கட்டமைப்பில் பயின்ற மாணவி ராஜேஸ்வரி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்திருப்பது இத்திட்டத்திற்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "CHICKEN POX"..! வீரியமெடுக்கும் சின்னம்மை நோய்... சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!