தமிழ்நாடு அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசை, திமுகவுடனான உறவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் ஆகியவற்றை விவாதிக்கும் முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது. பல ஊகங்களுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த 32-வது பொதுக்குழு கூட்டம், கட்சியின் நிர்வாகக் குழு முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. கூட்டத்தில் கட்சியின் உள் விவகாரங்கள், தலைமைப் பொறுப்புகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி நிலை மற்றும் பின்னணிமதிமுக நீண்டகாலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் தவெக உள்ளிட்ட புதிய சக்திகள் உருவான நிலையில், கூட்டணி உறவுகளில் சில பதற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும், மதிமுக தொடர்ந்து திமுகவுடன் இணைந்து செயல்படுவதே சிறந்தது என்கிற நிலைப்பாட்டை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
இதையும் படிங்க: இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!
கடந்த ஆண்டு (2025) ஜூன் மாதம் ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில், 2026 தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிர்வாகக் குழு கூட்டத்தில் அந்தக் கோரிக்கையைத் தளர்த்தி, கூட்டணியில் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மதிமுகவினர் பெரும்பாலானோர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கு வைகோவுடன் வலியுறுத்திய நிலையில் வரும் 27ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது சென்னையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலங்குமா? அல்லது தொடருமா என்பது அன்றைய தினம் முடிவாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ் மொழி உரிமைக்காக தியாகம் செய்த வீரர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதீர்..!! வைகோ எச்சரிக்கை..!!