மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கூடுதல் தொகுதிகள் கோருவது தொடர்பாக தீர்மானங்கள் வெளியிடும்போது தெரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்தார். அமித் ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை என கூறிய வைகோ, ஆங்கிலம் உலக மொழி., ஆங்கிலம் தெரிந்தால் உலகம் முழுவதும் சென்று வரலாம்., அதனால்தான் தமிழும் ஆங்கிலம் மட்டும் தான் தமிழ்நாட்டை இருக்கும் என்று பேரறிஞர் அண்ணா கூறியதாக தெரிவித்தார்.

இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில மொழிகளும் அவற்றை ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலேயே அவர் பேசினார்., திராவிட இயக்கம் அந்த தீர்மானத்தை முன்வைக்கிறது. மறுமலர்ச்சி திமுகவும் அதை வலியுறுத்துகிறது., ஆனால் பாஜக இயக்கத்திற்கு அதில் விருப்பமில்லை., அவர்கள் ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பொறுப்பு வந்ததும் பொருத்தமில்லாத பேச்சு... நயினார் நாகேந்திரனை எச்சரித்த வைகோ...!

அவர்கள் ஹிந்துத்துவா சக்திகள் என்றும் அலகாபாத்தில் கடந்த ஆண்டு ஒரு கூட்டத்தை போட்டு தீர்மானம் நிறைவேற்றியதாகவும், அதில், இந்தியா என்று அழைக்கக்கூடாது பாரத் என்று தான் அழைக்க வேண்டும்., தலைநகர் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு மாற்ற வேண்டும்., முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கக் கூடாது., ஹிந்தியும் சமஸ்கிருதமும் மட்டும்தான் இந்தியா முழுவதும் பரப்பப்பட வேண்டும்., இப்படி 32 பக்கத்தில் ஒரு பிரகடனம் வெளியிட்டார்கள்., அதனை மீண்டும் ஒரு முறை வெளியிட்டார்கள் என்று கூறினார்.

இந்த பின்னணியில்தான் இந்த சக்திகள் இயங்கி கொண்டிருக்கின்றன., ஆனால், அதை பல மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார். திராவிட இயக்கத்தை காக்க நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு கைகோர்த்து உள்ளோம்., இதில் எந்த மாற்றும் இல்லை என்று கூறிய வைகோ,பாட்டாளி மக்கள் கட்சி ஒரு வலிமையான கட்சி., தற்போது நடப்பது உட்கட்சிப் பூசல் அது குறித்து நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட தான் பயணம்.. ஆனா, ஒரு ஆசை !.. கூடுதல் தொகுதிக்கு அடிப்போட்ட துரை வைகோ!