திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இடையேயான கூட்டணி தமிழ்நாடு அரசியலில் நீண்ட வரலாறு கொண்டது. இவை இரு திராவிடக் கட்சிகளாக இருந்தாலும், அவற்றின் கூட்டணி உறவு காலப்போக்கில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

வைகோவின் தலைமையில் 1994-இல் திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக உருவானது. ஆனால், 2001, 2006, 2011, 2014, 2019 மற்றும் 2021 தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்தே மதிமுக பயணித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், வைகோவின் மகன் துரை வைகோ, திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: பாமகவின் பிளவு... ஒரே வார்த்தையில் ஷாக் கொடுத்து ஆஃப் செய்த வைகோ!

திமுக கூட்டணியில் மதிமுக முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், வைகோவிற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 2026 தேர்தலில் மதிமுக கூடுதல் தொகுதிகள் கேட்க இருப்பதாகவும், அதுவும் இரட்டை இலக்க தொகுதி என்றும் தகவல் வெளியானது. இதனை முற்றிலுமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க உள்ளதாக கூறுவது பொய் என கூறினார். நான் அதுபோல் சொல்லவில்லை என்றும் பொய்களை பரப்புகிறார்கள் எனவும் கூறிய அவர், தொகுதி குறித்து இன்னும் தலைமை முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இரட்டை இலக்கம் கேட்க போகிறோம் என்ற பெயரையே தாம் இதுவரை கூறவில்லை 12 தொகுதிகள் என்று உதாரணத்திற்கு தான் பேசினோம் என கூறினார். 2017-ல் எடுக்கப்பட்ட கூட்டணி முடிவை தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும், பாஜகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பெற முயற்சிப்போம் என்றாலும், கூட்டணியின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்கப்படும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பொறுப்பு வந்ததும் பொருத்தமில்லாத பேச்சு... நயினார் நாகேந்திரனை எச்சரித்த வைகோ...!