கோவை மாவட்டம் பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

தற்போது, திராவிடம் என்பதற்கான விளக்கத்தை கொடுத்தார். திராவிடம் என்பது ஒட்டுமொத்த மாநிலங்களில் உள்ளடக்கிய நிலப்பரப்பு என்றும் திராவிடம் என்பது தங்களைப் பொறுத்தவரை ஒரு நிலப்பரப்பு அங்கு வாழக்கூடிய திராவிடர்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெண்களை கேவலமா பேசுறவங்களுக்கு நட்சத்திரப் பேச்சாளர் பட்டம்... திமுகவை கழுவி ஊற்றிய வானதி சீனிவாசன்!!

திராவிடம் என்ற சிந்தனையை இவர்களாலே ஒன்றிணைக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம் என்று கூறிய அவர், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவது திராவிடம் அல்ல என்று கூறினார். நானும் திராவிடர் தான் நீங்களும் திராவிடர் தான் என்று கூறிய வானதி சீனிவாசன், பாஜக அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

தங்கள் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது, மீண்டும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் திமுக ஆட்சியில் வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்று கூறினார். முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது., ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை, சித்தாந்தம் இருக்கிறது., அதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தங்கள் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என கூறினார்.
இதையும் படிங்க: காதலியை சந்திக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்... பெண் வீட்டார் கட்டுக்கதை... நியாயம் கேட்ட வானதி சீனிவாசன்!!