கோயம்புத்தூரில் உள்ள ஒரு சாதாரண வீட்டில், சமீபத்தில் நிகழ்ந்த ஒரு மனிதாபிமான நிகழ்வு தமிழக மக்களின் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. 8 வயது சிறுமி வெண்பா, திடீரென ஏற்பட்ட தலைவலி மற்றும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சொன்னது மிகவும் வேதனையான நிகழ்வு. மூளை ரத்தக்கசிவு காரணமாக மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டது என கூறப்பட்டது.
அவரது தந்தை, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 73-வது வார்டு திமுக கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் தாயார், அந்த தருணத்தில் எடுத்த முடிவு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தங்கள் மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

அந்த முடிவால், வெண்பாவின் கண்கள், சிறுநீரகங்கள், இதய வால்வுகள் உள்ளிட்ட பல உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதனால் ஏழு பேர் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.அவர்களில் சிலர் நீண்ட நாட்களாக உறுப்பு காத்திருந்தவர்கள். ஒரு சிறுமியின் இழப்பு, வேறு ஏழு குடும்பங்களுக்கு நம்பிக்கையாக மாறியது. இது போன்ற உறுப்புத் தான செயல்கள் தமிழகத்தில் ஏற்கனவே பெருமைக்குரியதாக இருந்தாலும், இந்தச் சம்பவம் மக்களிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாங்க... வாங்க ஓபிஎஸ்.! அன்பானவர், பண்பானவர்..! புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர்..!!
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெண்பாவின் வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. முதலமைச்சர் வீட்டுக்குள் சென்று, வெண்பாவின் பெற்றோருடன் பேசினார்; அவர்களின் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: "தளபதி ஸ்டாலின்" … மீண்டும் திமுக ஆட்சிதான்… OPS நம்பிக்கை..!!!