கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, விஜய் சென்னைக்கு தனி விமானத்தில் திரும்பினார். அது ஒரு தவறான முடிவாகத் தோன்றியது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல், போலீஸ் அனுமதி கோராமல் விலகியது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களைத் தூண்டியது. விஜய் ஏன் கரூருக்கு வரவில்லை என்ற கேள்வி சமூக வலைதளங்களில், ஊடகங்களில் பரவியது. கரூர் கூட்ட நெரிசலில் குடும்பங்களை மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினார்.

கரூர் சம்பவத்தை விசாரிக்க முதலில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிநபர் ஆணையம் அமைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து கரூர் சம்பவத்தை சிபிஐ க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,
இதையும் படிங்க: மொத்த பவரையும் கையில் எடுக்கும் விஜய்... தவெக பொதுக்குழுவில் நிறைவேறப் போகும் ஸ்பெஷல் தீர்மானம்...!
தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. 40 நாட்களுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் கோரச்சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் இது. தேர்தல் பணிகள், அடுத்த கட்ட நடவடிக்கை, 2026 தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கொள்கை தலைவர்களின் படங்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: பிள்ளையாரப்பா எந்த வம்பு தும்பும் வர கூடாதுயா! தேங்காய் உடைத்து வழிபட்ட புஸ்ஸி ஆனந்த்…!