இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் மூன்றாவது நாள் அமர்வு தொடங்கியுள்ள நிலையில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் மாற்று ஆட்சி முறையை உடைத்து புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது. தமிழக வெற்றி கழகம் இன்று தனது பெரும்பான்மையின் நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

108 இடங்களில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்ற நிலையில் பெரும்பான்மை நிரூபிக்க 118 இடங்கள் தேவைப்பட்டது. தமிழக வெற்றி கழகம் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் நடைபெறுகிறது. பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எம்.எல்.ஏ. சபரிநாதனுக்கு ஜாக்பாட்..! அரசு கொறடாவாக நியமனம்..! முக்கிய அறிவிப்பு..!!
இந்த நிலையில் முதல்வர் விஜய் உரையாற்றினார். தவெக அரசு மதசார்பற்ற அரசாக தான் செயல்படும் என முதல்வர் விஜய் உறுதி அளித்துள்ளார். முந்தைய அரசியல் திட்டங்கள் தொடரும் என்றும் உறுதியளித்துள்ளார். குதிரை பேரம் குறித்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசை என்றும் குதிரை பேரத்திற்கு துணை போகவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் எதிர்த்து பேசியவர்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் வலியுறுத்தல்களுக்கும் பதில் கொடுத்தார்.
இதையும் படிங்க: வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!