தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழித்து, இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் இந்த சமூக விரோதப் பழக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்ட அவர், போதைப்பொருள் தடுப்பை மிக முக்கியமான அரசு நிகழ்ச்சி நிரலாக்கியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படைகள் முதலமைச்சர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின்படி, மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தடுப்பு படை காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. மேலும், 9 மாநகரக் காவல் மாவட்டங்களில் சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று அல்லது அதிகம் என்ற அடிப்படையில் 28 காவல் நிலையங்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 65 இடங்களில் இந்த சிறப்பு படைகள் இயங்கும். சென்னையில் மட்டும் 12 இடங்களில் இத்தகைய தடுப்பு படை காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சென்னை வடக்கு மண்டலத்தில் மூன்று தனிப்படைகள் உருவாக்கப்படுகின்றன.

சென்னை வடக்கு மண்டலத்தில் 3 போதைப்பொருள் தடுப்பு படை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு படை CM விஜய்யின் நேரடி கண்காணிப்பில் செயல்படும். தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திருநங்கைகளின் உரிமைக்குரல்..! செவி சாய்த்த முதல்வர் விஜய்..! முக்கிய ஆலோசனை..!
இந்த சிறப்பு படைகள் போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு மற்றும் தொடர்புடைய குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். சொத்துக்களை முடக்குதல், பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்கும். தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடேங்கப்பா..!! நம்ம தமிழக CM-க்கு மாசம் இவ்ளோ சம்பளமா..!! அப்போ அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு..??